Monday, 20 October 2014

ஆயிரம் = தாமரை, நூறு ஆயிரம் = தவளைக்குஞ்சு: கணிதத்தின் கதை

ஆயிரம் = தாமரை, நூறு ஆயிரம் = தவளைக்குஞ்சு: கணிதத்தின் கதை

 

மனிதர்கள் முதலில் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்டனர். எண்ணி , எண்ணிப் பார்த்ததை ஏதாவது ஒரு வடிவத்தில் குறித்து வைக்க வேண்டுமே என்ற தவிப்பு ஏற்படாதா? தவியாய் தவித்தார்கள். அந்தத் தவிப்பின் குழந்தைகள்தான் எண்கள். 

உலகம் முழுவதும் பல மனிதக் குழுக்கள் வாழ்ந்தன. அவர்களுக்கு உள்ளே பலவகையான எண் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றிலும் ஒன்று முதல் ஒன்பது வரையான எண்கள் பொதுவாக, விரல்களின் உருவங்களாகவே முதலில் உருவாகின. 

தாமரையும் தவளையும் 
 

ஏராளமாக இருக்கிற பொருள்களுக்கு எதை எல்லாம் உருவமாக வைக்கலாம் என அதன் பிறகு மனிதர்கள் தேடினார்கள். 

ஆயிரம் = தாமரை, நூறு ஆயிரம் = தவளைக்குஞ்சு
1800 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்கக் கண்டத்தில் மாயன் இந்தியர்களின் நாகரிகம் இருந்தது.அந்த மக்கள் கைகளோடு கால்களையும் சேர்த்து எண்ணுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம். ஐரோப்பியர்களின் எண்ணிக்கை எப்படி 10 ஐ அடிப்படையாகக் கொண்டு அமைந்ததைப்போல, மாயன் இந்தியர்களின் எண்ணிக்கை முறை 20 ஐ அடிப்படையாகக் கொண்டு இருந்தது.அவர்களின் எண்கள் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டதாக இருந்தது. 

ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்னால், இந்தியர்களாகிய நாம் பயன்படுத்திய எண்களின் உருவங்கள்தான் சில மாற்றங்களுக்கு உள்ளாகி இன்றும் உலகில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஏராளமாக இருக்கிற பொருள்களுக்கு எதை எல்லாம் உருவமாக வைக்கலாம் என அதன் பிறகு மனிதர்கள் தேடினார்கள். 

5000 வருடங்களுக்கு முன்னால் எகிப்து நாட்டில் ஓடிய நைல் நதியில் ஆயிரக்கணக்கில் தாமரைகள் இருந்தன. பல்லாயிரக்கணக்கில் தவளைகள் இருந்தன. அந்தத் தவளைகள் எல்லாம் குஞ்சுகள் பொரித்தால் பல்லாயிரங்களாய்ப் பெருகி நதியை நிறைத்தன. தங்களின் கண்கள் முன்னால் ஏராளமாக இருந்தவற்றிலிருந்து எகிப்தியர்கள் தங்களின் எண் உருவத்தை தேர்ந்தெடுத்தனர். 

ஒரு ஆயிரம் என்றால் ஒரு தாமரை. நூறு ஆயிரம் என்றால் ஒரு தவளைக்குஞ்சு என்று உருவங்களைப் பயன்படுத்தினர்.
ஒரு ஆயிரம் என்றால் ஒரு தாமரை. நூறு ஆயிரம் என்றால் ஒரு தவளைக்குஞ்சு என்று உருவங்களைப் பயன்படுத்தினர். 

அம்புமுனை, எழுத்து, புள்ளிகள் பாபிலோனியாவில் 5000 வருடங்களுக்கு முன்னால் அம்பு முனைகளின் உருவங்கள் எண்களாகப் பயன்பட்டன. 


2500 வருடங்களுக்கு முன்னால் கிரேக்கர்கள் தங்கள் மொழியின் எழுத்துக்களையே எண்களின் உருவங்களாகப் பயன்படுத்தினர். 

1800 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்கக் கண்டத்தில் மாயன் இந்தியர்களின் நாகரிகம் இருந்தது.அந்த மக்கள் கைகளோடு கால்களையும் சேர்த்து எண்ணுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம். ஐரோப்பியர்களின் எண்ணிக்கை எப்படி 10 ஐ அடிப்படையாகக் கொண்டு அமைந்ததைப்போல, மாயன் இந்தியர்களின் எண்ணிக்கை முறை 20 ஐ அடிப்படையாகக் கொண்டு இருந்தது.அவர்களின் எண்கள் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டதாக இருந்தது.

No comments:

Post a Comment